NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

Facebook மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட போதைப் பொருள் விழா – பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை…!

அவிசாவளை பகுதியில் போதைப்பொருள்களுடன் 12 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவிசாவளை – குருகல்ல பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதைப்பொருள் விருந்து நிகழ்வில் வைத்தே இவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வானது, விடுதியின் உரிமையாளரால் முகப்புத்தகம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து கஞ்சா போதைப் பொருளும், விடுதி உரிமையாளரிடம் இருந்து ஹஷிஸ் போதைப்பொருள் மற்றும் 22 மதுபான போத்தல்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles