NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ICC குறித்து பேசுவதற்கு அமைச்சரவை குழுவிற்கு ஜனாதிபதி அனுமதி – கஞ்சன

இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்கும் வகையில் ஐசிசி குறித்து பேசுவதற்கு அமைச்சரவை குழுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த விடயத்தை அரசியலில் சேர்க்க வேண்டாம் என தாம் வேண்டுகோள் விடுத்ததாகவும், அதற்காக வருந்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐ.சி.சி தடையை நீக்குவதற்கு எதிர்க்கட்சியும் அரசாங்கமும் ஒன்றிணைய வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

கிரிக்கெட் தொடர்பான கட்டமைப்பு மாற்றம் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்கு அமைச்சர் குழுவிற்கு ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share:

Related Articles