NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரித்தானியாவில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கு தடை?

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பிரித்தானிய அரசாங்கம் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கு தடை விதிக்க முன்வந்துள்ளது.

இந்த பிரேரணை சட்டமாக நிறைவேற்றப்பட்டால் ஒவ்வொரு வருடமும் சிகரெட் வாங்குவதற்கான வயது ஒரு வருடமாக அதிகரிக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி 2040ஆம் ஆண்டுக்குள் இளைஞர் சமூகம் மத்தியில் புகைப்பிடிப்பதை விரைவில் நிறுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகைபிடிப்பதால் பிரித்தானிய சுகாதார சேவைக்கு ஒவ்வொரு வருடமும் 17 பில்லியன் பவுண்டுகள் செலவாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share:

Related Articles