NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தளபதி விஜய் அவர்களுக்கு தயாரிப்பாளர் கோரிக்கை.

இருபது வருடங்களுக்கு முன்பு வெளியான தளபதி விஜய்யின் கில்லி படம் தற்போது 20 வருடங்களுக்கு பின் ரீரிலீஸ் ஆகி தியேட்டர்களில் ரசிகர்களை கொண்டாட வைத்து இருக்கிறது.மேலும் நல்ல வசூலும் வந்து கொண்டிருப்பதாக தகவல்களும் வெளியாகிறது. விஜய் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கிவிட்ட நிலையில் விரைவில் சினிமாவில் இருந்து முழுமையாக விலக இருக்கிறார். தற்போது அவரது படத்தின் ரீரிலீசுக்கே மிகப்பெரிய வசூல் வந்திருப்பது சினிமா துறையில் பிரமிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இந்நிலையில் சக்தி பிலிம் பேக்டரி தயாரிப்பாளர் சக்திவேலன் விஜய்யை நேரில் சந்தித்து பெரிய மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, தியேட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸ் மெய்சிலிர்க்க வைத்தது. திரைத்துறை நலனுக்காக நீங்க தொடர்ந்து நடிக்க வேண்டும். வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க என அவர் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

Share:

Related Articles