NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கர்ப்பமான பிறகே சித்தார்த்தை மணந்தார் நடிகை கியாரா அத்வானி

கியாரா அத்வானி கர்ப்பமான பிறகே சித்தார்த் மல்ஹோத்ராவை மணந்ததாக கே.ஆர்.கே. ட்வீட் செய்துள்ளார்.
விஷ்ணுவர்தன் இயக்கிய ஷேர்ஷா படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக நடித்தார் கியாரா அத்வானி. அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து காதலை வீட்டில் சொல்ல அவர்கள் பச்சைக்கொடி காட்டினார்கள். இதையடுத்து ராஜஸ்தானில் இருக்கும் சுர்யகார் அரண்மனையில் சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானியின் திருமணம் நடந்தது.பிரேக்கப் வரை சென்று கல்யாணத்தில் முடிந்த சித்தார்த் காதல் பிப்ரவரி 7ம் தேதி நடந்த திருமணத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. திருமணம் முடிந்த கையோடு தன் மனைவியை டெல்லியில் இருக்கும் தன் பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் சித்தார்த் மல்ஹோத்ரா. இந்நிலையில் கியாரா அத்வானி கர்ப்பமானதால் தான் அவசர, அவசரமாக திருமணம் நடந்திருக்கிறது என பேச்சு கிளம்பியது. இதை பார்த்த கியாராவின் ரசிகர்கள் கோபம் அடைந்து விளாசினார்கள்.

பாலிவுட்டின் நம்பர் ஒன் விமர்சகர் நான் தான் என சொல்லி வரும் கமால் ஆர். கான் எனப்படும் கே.ஆர்.கே. கியாரா அத்வானியின் பெயரை குறிப்பிடாமல் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, முதலில் கர்ப்பமாகிவிட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொள்வது தான் பாலிவுட்டின் புது டிரெண்ட் ஆகும். பாலிவுட்டில் அண்மையில் நடந்த திருமணமும் கூட இதே ஃபார்முலாவை தான் பின்பற்றியிருக்கிறார்களாம். நல்லது என தெரிவித்துள்ளார். கே.ஆர்.கே.வின் ட்வீட்டை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, யார் கர்ப்பமானால் உங்களுக்கு என்ன?. அதான் அவர்களுக்கு திருமணம் நடந்துவிட்டதே. இப்படியே பாலிவுட்டில் இருப்பவர்கள் பற்றி குறை சொல்லிக் கொண்டே இருந்தால் உங்களை யாரும் மதிக்க மாட்டார்கள். கியாரா அத்வானி, சித்தார்த் மல்ஹோத்ரா பெயரை சொல்லாவிட்டால் எங்களுக்கு நீங்கள் யாரை பற்றி ட்வீட் போடுகிறீர்கள் என்பது தெரியாது பாருங்க என தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles